அனைவருக்கும் வணக்கம்,
இந்த வலைப்பதிவை ஆரம்பித்தது இந்திய ஒன்றிய மக்களால் (அப்பாவி) போற்றி புகழப்படும் திரு .அப்துல் கலாமை சிறுமைப்படுத்துவதோ அல்லது காழ்புணர்ச்சியால் திட்டுவதோ அல்ல.
அவர் சாதனையாளர்,ஒத்துக்கொள்ள வேண்டியது தான். ஆனால் அவர் குடியரசு தலைவராக சாதித்த பிறகு யாருக்கான அரசியலை செய்தார் .ஏன் ,இன்னும் பார்ப்பன மதவாத சக்திகள் அவரை ஆதரிக்கின்ற என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
உண்மையில் அவருடைய வாழ்நாளில் யாருக்காக உழைத்தார், எந்த கூட்டத்தினரை உயர்த்தி பிடித்தார் என்பது போன்றவை கவனிக்கப்பட வேண்டியவை.அவற்றை பதிவிடவே இந்த வலைப்பதிவின் நோக்கங்கள்.
அவர் இறந்த பொது நான் வெளியிட்ட எதிர் கருத்துக்களால் அவருடைய ரசிகர்கள் ஆபாசமான கருத்துக்களை முகநூலில் வெளியிட்டது நான் கண்டது.இங்கும் அது போல் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் அவருடைய போதனைகள் எந்த மாதிரியானவை என்பது தெரிந்து கொள்ள வேண்டியது.
என்னை போல் எதிர்க்கருத்து கொண்ட தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்: முடிந்த வரை இந்த வலை பதிவை இன்னும் பலர் படிக்கும்படி செய்து ஒரு ஆக்கபூர்வமான விவாதத்தை கட்டமைக்க வேண்டுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக